Friday, September 11, 2015

என்றென்றும் வேண்டாம்!

வேண்டாம் வேண்டாம்
வேண்டாம்!

வருத்தம் இல்லாத வாழ்கை
வேண்டாம் -  அதீத
வாசனை உள்ள  பூவும்
வேண்டாம்.

சண்டைபோடாத  நண்பன்
வேண்டாம் - மறக்க
முடியாத ஞாபகங்கள்
வேண்டாம்.

கவலை தராத மகனும்
வேண்டாம் - தலை முடி இழுத்து
வம்பு செய்யாத மகளும்
வேண்டாம்.

வீடு வந்தும் வருந்த வைக்காத
வேலை வேண்டாம் - மேலும்
அரசியலே இல்லாத வேலையே
வேண்டாம்.

பஞ்சாயத்து இல்லாத ஆலும்
வேண்டாம் - அதிகாலை
சுட வைக்காத பாலும்
வேண்டாம்.

கூட்டமே இல்லாத கடையும்
வேண்டாம் - எல்லா
செயலுக்கும் தொடர்பில்லா தடையும்
வேண்டாம்.

ஆளில்லா சாலையும்
வேண்டாம் - பறவை
சத்தமில்லாத காலையும்
வேண்டாம்.

எதிர்த்து  பேசாத மனைவியும்
வேண்டாம் - என்னைச்சுற்றி
ஆயுதம் தங்கிய துணையும்
வேண்டாம்.

எல்லாவற்றில்லும் முதல் வரும்
குழந்தைகள் வேண்டாம் - என்னை
எந்நேரமும் வாழ்த்தும் உறவுகளும்
வேண்டாம்

வேண்டாம் வேண்டாம்
வேண்டாம்

வாழ்கையில் துன்பமே இல்லாத
இன்பம் என்றென்றும் வேண்டாம்!




Wednesday, September 9, 2015

விதையில் இருந்து விருட்ச்சமானாய்

கன நேரத்திற்குள்ளே
கால்களுக்கு கீழே
கானல் நீராய்
கரைகின்ற காலம்

எத்தனை போராட்டங்கள்
எத்தனை விழுப்புண்கள்
எண்ணில்லா புகழ்சிகள்,  இகழ்சிகள்
எதுவுமே நிலையில்லை

நீ அடைந்ததெலாம் கை விட்டு நழுவும்
உன் பயணம் மீண்டும் தொடங்கும்
உன்னுடையது எல்லாம் - ஒரு நொடியில்
அதுவுடையதகும்

விதையில் இருந்து விருட்ச்சமானாய்
ஓரிரவில் மறைந்து போவாய்


சுற்றம் புரிதலும், சூழல் பழகுதலும்
நிஜம்போல் இருக்கும் - உண்மை
வெளிச்சத்தில்,  நிழல் மறைய
உன்னிலை தடுமாறும்

விதையில் இருந்து விருட்ச்சமானாய்
ஓரிரவில் மறைந்து போவாய்

விடியலில் நனைந்த சூரியனும்
மடியலுக்கு பயணம்
நட்பும் நட்பும், பகையும் சற்றே
முரண்பாடாய் நெருடும்

பல வருடம் காணாத நட்பும்
சில நரம்புகளை வருடி மறையும்
நடப்பது நிஜமென்றானபின்
எல்லமே நிழல்போல் கரைந்துவிடும்

விதையில் இருந்து விருட்ச்சமானாய்
ஓரிரவில் மறைந்து போவாய் 

Tuesday, September 8, 2015

நான் நலமாக இருக்கிறேன்

திரும்பவும் சொல்கிறேன்
திக்கில்லாமல் செல்கிறேன்

அழகான புன்னகை இல்லை
அனைவரும் திரும்பிப்பார்க்க
அடிக்க வைக்கும் அழகும் இல்லை
அனைவரும் விரும்பி போற்ற

என்சூழல் கதையில்
எல்லாரும் போல்
அழகான, வீரமான
வெற்றிக்கதா நாயகனாக ஆசை - ஆனால்

நான் நானாக இருக்கிறேன்
நலமாக!

என் எண்ணங்கள் இருக்கின்றன
நலமாக!!

என் செய்கைகள் இருக்கின்றன
நலமாக !!!

விளையாட்டு வீரனாக வேண்டாம்
மற்றவர்களின் மகிழ்ச்சிக்கு
மேடை ஏறி போராட வேண்டாம்
மற்றவர்களின் இகழ்ச்சிக்கு

என் தருணம் என்னுடன்
எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க

நான் நானாக இருக்கிறேன்
நலமாக!

நடந்து வந்த பாதையில்
கடந்து வந்த கனவுகளில்
நிழலாய் தொடர்ந்தது
என் ஞானம்தான்

வாழ்ந்த காலங்கள் இறந்தாலும்
வாழும் வாழ்கை நிகழ்வதால்

நான் நானாக இருக்கிறேன்
நலமாக

Friday, September 4, 2015

நல்லதே நடக்கும் என நினைதேன்


மழை பார்த்து வியந்தேன்
என் மீது விழுந்தபோது
என் கரம் மேல்
என்அருகாமைல்

மழை பார்த்து வியந்தேன்
காற்றை பார்த்து வியந்தேன்
உன் உடைகளின் உள்
ஊடுருவிப் பாயும் பொழுது

உன் நிழலைவிட
என் அருகாமையில்

நல்லதே நடக்கும் என நினைதேன்
நன்மையே நிலைக்கும் என் நினைத்தேன்

இவ்வுலகம்  உனக்கும்
இவ்வுலகம் எனக்கும் - நன்மையே

நீ என்னைவிட்டு பிரியும் பொழுது
நான் உன்னிடம் சொன்னது

மறப்பதிருக்கு ஒன்றுமில்லை
மன்னிபதற்கு ஒன்றுமில்லை

நீ திரும்பிவருவாய் என்றும்
நானின்றி நீயில்லை என்றும்
தெரிந்தும் புரிந்தும் கொள்வாய்
என நினைத்தேன் - ஆனால்

என்னால் தாங்கமுடியவில்லை - நீ
நானின்றி மகிழ்ச்சியாய் இருக்கிறாய்

நான் கீழுலகில்; நீ மேலுலகில்


இரவை பார்த்து வியந்தேன்
இறப்பை பார்த்து வியந்தேன்
நீயில்லாமல் கழிந்த நாட்கள்
யாருடன் நீ இருந்தாயோ?

காதல் பார்த்து வியந்தேன்
அன்பை பார்த்து வியந்தேன்

இங்கிருந்த காதல்
என்னுடன் இருந்த அன்பு
நம்முள் இருந்த புரிதல்

சென்றுவிட்டது பிறருக்காக
இறப்பை பார்த்து கோபித்தேன்

நல்லதே நடக்கும் என நினைதேன்
நன்மையே நிலைக்கும் என் நினைத்தேன்

நானின்றி நீயில்லை என்று 
தெரிந்தும் புரிந்தும் கொண்டிருப்பாய் 
என நினைத்தேன் -  தவறு 

என்னால் தாங்கமுடியவில்லை - நீ 
நானின்றி மகிழ்ச்சியாய் இருக்கிறாய்!
நான் கீழுலகில்; நீ மேலுலகில் 

நான்   புதைமண்ணில் 
என் கைவிட்டு நீ நழுவுகிறாய் 
நான் என் தினத்திற்கு 
காத்திருக்கிறேன் 

என் சிரிப்பின் மறைவில் 
தெரியாத அழுகைகள் 

நல்லதே நடக்கும் என நினைதேன்
நன்மையே நிலைக்கும் என் நினைத்தேன்